search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழுதான வகுப்பறை"

    சிவகங்கை அரசு மகளிர் பள்ளியில் அமைச்சர் பாஸ்கரன் திடீரென ஆய்வு செய்தார். அப்போது பழுதான வகுப்பறை கட்டிடத்தை அகற்ற உத்தரவிட்டார்.
    சிவகங்கை:

    சிவகங்கை–மேலூர் சாலையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்த பள்ளி இருக்கும் பகுதி வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அரசு பள்ளியை கண்டதும் அமைச்சர் திடீரென அந்த பள்ளிக்கூடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார்.

    அப்போது பள்ளியின் கழிவறை, குடிநீர் வசதிகள் குறித்து அமைச்சர் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அந்த பள்ளியில் முறையான குடிநீர் வசதி இல்லாததை கண்டு பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் விவரம் கேட்ட அமைச்சர், பின்னர் உடனடியாக குடிநீர் வசதி செய்து தர மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

    மேலும் அங்கு கடந்த 1984–ம் ஆண்டு கட்டப்பட்ட பழுதான வகுப்பறை கட்டிடம் இடியும் நிலையில் இருப்பதை கண்ட அவர், அது குறித்து மாவட்ட பொதுப்பணித்துறை பொறியாளரை தொடர்பு கொண்டு அந்த பழுதான கட்டிடத்தை 10 நாட்களுக்குள் அகற்ற உத்தரவிட்டார். ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் உடனிருந்தார்.
    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பள்ளி ஒன்று பழுதான வகுப்பறைகள் இடிக்கப்பட்டதால் 10 மாதமாக கோவிலில் இயங்கி வருகிறது.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் மோடிகுப்பம் ஊராட்சி மத்தேட்டிபல்லி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 75 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

    ஆரம்ப காலத்தில் ஓலை வேய்ந்த கட்டிடத்தில் இயங்கி வந்த இந்த பள்ளிக்கு 1967-ம் ஆண்டு கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டிடம் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் பராமரிப்பின்றி பழுதடைந்து விட்டது. எனவே புதிய வகுப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனையடுத்து 10 மாதங்களுக்கு முன்பு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு ஏதுவாக பழுதடைந்த பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது. தற்போது அந்த பள்ளி வளாகத்தில் சத்துணவு மையம் மட்டுமே இயங்கி வருகிறது. பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டதால் அருகில் உள்ள பாட்டசாரி கெங்கையம்மன் கோவிலில் தற்காலிகமாக பள்ளி இயங்கி வருகிறது.

    புதிய கட்டிடம் விரைந்து கட்டி கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை கட்டிடம் கட்டி கொடுக்கப்படவில்லை. இதன் காரணமாக அருகில் உள்ள கோவிலிலேயே பள்ளி இயங்கி வருகிறது.

    நடவடிக்கை எடுக்க வேண்டும் இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘‘தனியார் பள்ளி மோகம் அதிகரித்துள்ள நிலையில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அரசு பள்ளிகளையே நம்பி உள்ளனர். தமிழக கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு விரைவில் பள்ளி கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

    அதிகாரிகளிடம் கேட்டபோது இன்னும் சில தினங்களில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட உள்ளது என்றனர். #tamilnews
    ×